பொன்னேரி: பழவேற்காட்டில் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் அவ்வப்போது சில உதவிகளை செய்து வருவது வழக்கம். 1999-2000 ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் வகையில் தற்போது பள்ளியில் சங்கமித்தனர். பழைய மாணவர்கள் சங்கம நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.