திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் 3 லட்சம் ஆடுகள் உள்ளன. ஆடு வளர்க்கும் குடும்பங்களில் அவ்வப்பொழுது நேரிடும் அவசர அத்தியவசிய தேவைகளின் பொழுது தங்களது இருப்பிலுள்ள ஒன்றிரண்டு ஆட்டுக் குட்டிகளை விற்று தேவையை ஈடு செய்து வருகின்றனர். அத்தகைய ஏழை மக்களின் ஆடுகளில் ஆட்டுக்கொல்லி என்னும் வைரஸ் நோய் தாக்கம் சமீப காலங்களில் ஏற்பட்டு வருகிறது. நோய்த் தாக்கப்பட்ட வெள்ளாடுகளில் 80 சதவிகிதம் வரையும் செம்மறி ஆடுகளில் 10 சதவிகிதம் வரையும் இறப்பு நேரிடும் வாய்ப்பு உள்ளதால் மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோய் ஆகும், இதனாலாயே இந்நோய்க்கு ஆட்டுக்கொல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது.