மதுராந்தகம்: மதுராந்தகம் சுடுகாட்டில் பிறந்து சில நாட்களே ஆன பளச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். அதனை வீசி சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை சுடுகாடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.