சென்னை: தீபாவளி வாழ்தது கூறவே முதல்வர், துணை முதல்வரை சந்தித்ததாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முதர்வருடான சந்திப்பில் வேல் யாத்திரை, அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என கூறினார். தமிழகத்தில் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார். பீகாரில் பாஜக வெற்றி பெற்றது போல தமிழகத்திலும் வெற்றி பெரும் எனவும் தெரிவித்தார். வேல் யாத்திரை டிசம்பர் 6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என கூறினார். பல தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் யாத்திரையில் கலந்து கொள்ள இருக்கின்றனர். எவ்வளவு தடங்கல் வந்தாலும் திட்டப்படி வேல் யாத்திரை தொடரும் என திட்டவட்டமாக கூறினார். தமிழக அரசின் செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், சாலை, கோவில் வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அரசு முன்னெச்சரிக்கையாக கைது செய்வது கண்டத்தற்குரியது என கூறினார்.