அவதூறு கருத்துகள் பரப்புவதாக டிவி நடிகரின் தந்தை மீது நடிகை போலீசில் புகார்

சென்னை: திருவான்மியூர் எல்.பி. சாலையில் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கடந்த வருடம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். இதனிடையே ஈஸ்வரின் தந்தை ரங்கநாதன், தன்னை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பி விடுவதாக, திருவான்மியூர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தியதில், விவாகரத்து வழக்கு விசாரணை முடியும் வரை ஜெயஸ்ரீ மற்றும் அவரது மகள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீட்டினை தனக்கு ஜீவனாம்சமாக எழுதி கொடுக்க வேண்டுமென ஜெயஸ்ரீ கேட்பதாகவும் கூறியுள்ளனர். இதற்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்காததையடுத்து அவர் இது போன்ற தேவையற்ற கருத்துக்களை பரப்பி வருவதாகவும், நடிகை ஜெயஸ்ரீ முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற போது 2 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றதை போல், தற்போது எங்களுடைய வீட்டையும் அபகரிக்க முயற்சி செய்வதாக ஈஸ்வரின் தரப்பினர் காவல் நிலையத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: