டெல்லி: மூன்று கட்டங்களாக படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா, சீன ராணுவம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, எல்லையில் நிலவி வரும் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காண படைகளை விலங்கிக் கொள்வது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவு செய்தியாளர் நவீன் ஸ்ரீவத்சவா மற்றும் ராணுவ இயக்குனரக உயர் அதிகாரி காய்க் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதிலிருந்து பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளை ஒரு வாரத்திற்குள் விலக்கிக்கொள்ள நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.