மீனவருக்கு உதவ வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களுடைய 94 விசைப்படகுகள் அழிக்கப்படுவதற்கான இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழக மீனவர்களுக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசோடு உயர்மட்ட பேச்சு வார்த்தை நடத்தி நம்முடைய மீனவர்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இலங்கை நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நமது மீனவர்கள் மிகப்பெரிய நஷ்டத்தையும், அதனால் வாழ்வாதாரத்தையும் இழப்பார்கள். இந்த சோதனையான நேரத்தில் அவர்களோடு, மத்திய, மாநில அரசுகள் துணை நின்று காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories: