கரூர்: கரூரில் விற்பனை செய்த போலி நாட்டுக்கோழி முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறையினர் நேற்று பறிமுதல் செய்தனர். கரூர் பஸ்நிலையம் அருகே மார்க்கெட் வளாகத்தில் முட்டை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதில் புல்லட் முட்டைகளை மொத்தமாக வாங்கி சாயமேற்றி சூடுசெய்யப்பட்ட தண்ணீரில் கலந்து வெள்ளை நிற முட்டையை பிரவுன் நிறத்துக்கு மாற்றி அதனை நாட்டுக்கோழி முட்டை என விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.