திருவள்ளூர்: திருவள்ளூர் வள்ளுவர்புரம் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தீபன் என்கிற தீபன் சக்கரவர்த்தி (31) இவரும், இவரது அண்ணன் தினகரனும் கடந்த ஐந்து வருடங்களாக அந்தப் பகுதியில் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையொட்டி இவர்கள் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீபன் சக்கரவர்த்தி வெள்ளூர்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 வழிப்பறி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.