டெலாவர்: அமெரிக்க அதிபராக நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல விரும்புவதாக அதிபர் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கூறியுள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பெரும்பாலான மாநிலங்களில் முன்னிலையில் இருக்கும் ஜோ பைடன், வில்மிங்டன் நகரில் பேசினார். அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே உள்ள வாக்கு வித்யாசங்கள் தனது வெற்றியை உறுதி செய்திருப்பதாக அப்போது பைடன் குறிப்பிட்டார். தமது ஆட்சியில் அமெரிக்க மக்களின் குரல்கள் அனைத்திற்கும் மதிப்பு அளிக்கப்படும் என்றும் பைடன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறேன்.