சென்னை: இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்திற்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மாவட்ட தலைவர்கள் ஜுனைத் அன்சாரி, ரஷீத், சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.