சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட செட்டிக்குளம் - திருவரங்கனேரி சாலை: பொதுமக்கள் அவதி

சாத்தான்குளம்: செட்டிக்குளத்தில் இருந்து திருவரங்கனேரி செல்லும் சாலையை புதுப்பிக்க உடைத்து 20 நாட்களாகியும் அமைக்கப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.  சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சி செட்டிக்குளத்தில் இருந்து திருவரங்கனேரி கட்டாரிமங்கலம் விலக்கு வரை சாலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதையடுத்து இந்த சாலையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழைய சாலை தோண்டி போடப்பட்டது. அதன்பின் சாலைப்பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் செட்டிக்குளம், திருவரங்கனேரி, பகுதி மக்கள் வெளியில் சென்று திரும்ப மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் இந்த சாலையில் செல்கையில் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை தொடர்கிறது. எனவே அதிகாரிகள் பார்வையிட்டு கிடப்பில் கிடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: