சாத்தான்குளம்: செட்டிக்குளத்தில் இருந்து திருவரங்கனேரி செல்லும் சாலையை புதுப்பிக்க உடைத்து 20 நாட்களாகியும் அமைக்கப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிக்குளம் ஊராட்சி செட்டிக்குளத்தில் இருந்து திருவரங்கனேரி கட்டாரிமங்கலம் விலக்கு வரை சாலை மிகவும் மோசமாக காணப்பட்டது. இதையடுத்து இந்த சாலையை அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பழைய சாலை தோண்டி போடப்பட்டது. அதன்பின் சாலைப்பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.