ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாம்பூரில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்புப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீரின் பேம்பூர் நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தொடர் பயங்கரவாத தேடுதல் வேட்டையில் பகல் 12 மணியளவில் ஒரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். மேலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுடனான என்கவுண்ட்டர் நீடித்தது. இதில், இன்று மாலை 4 மணியளவில் மற்றொரு பயங்கரவாதியை சுட்டு கொன்றனர். பாம்பூர் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.