நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை முதலில் நடிகர் கமல்ஹாசன் சொல்ல வேண்டும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
சென்னை: நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை முதலில் நடிகர் கமல்ஹாசன் சொல்ல வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நவம்பர் 11ல் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் ஸ்டாலின் விரும்பினால் பங்கேற்கலாம் எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் - எஸ்.ஏ.சி. இடையேயான கருத்து முரண்பாடுகளை அவர்கள் தான் விளக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.