வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும்: வானிலை மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், குமரியில் கனமழை பெய்யலாம். சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: