சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மழைக்காலங்களில் ரயில் நிலையத்தின் சுற்றுப்புறங்கள், ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பெட்டிகள், உயர்மட்டப்பாதை மற்றும் சுரங்கவழிப்பாதைகள் உட்பட முக்கிய இடங்கள் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உரிய பாதுகாப்புடனேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வினாடியும் விழிப்புணர்வுடன் கண்காணிக்கப்பட்டு பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.