புதுடெல்லி: இந்தியா, சீனா நாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக்கில் இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே நீடித்து வரும் மோதல் போக்கை சரி செய்யும் வகையில், கடந்த 7 மாதமாக தொடர்ந்து எல்லைப் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. இருப்பினும், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே சுமூக நிலை ஏற்படுவதற்கு பேச்சுவார்த்தையே சரியான வழி என்பதை இரு நாட்டு அரசுகளும் உணர்ந்து ஒப்புக் கொண்டு அதன்படி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றன.