சென்னை,:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் நடைபெறும் பட்டாசு விற்பனையில் 95 சதவிதம் பட்டாசுகள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் மூலம் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு படவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையிலும், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ள நிலையிலும் ராஜஸ்தான் அரசு பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையுத்தரவு 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.