சென்னையில் நடமாடும் அம்மா உணவக சேவை: தலைமைச்செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னையில் நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அம்மா உணவகங்கள் மூலம் கொரோனா காலத்திலும் விலையில்லா உணவு வழங்கி ஏழை மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளது. அம்மா உணவகங்களை தேடி தொழிலாளர்களின் சிரமங்களை அறிந்து அவர்கள் இருக்கும் இடத்திற்கே உணவை கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக நடமாடும் அம்மா உணவக சேவையை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உணவு வழங்கினர். வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று பகுதிகளில் நடமாடும் உணவகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் எளிமையாக உணவு கிடைக்க இத்திட்டத்தை விரிவுப்படுத்தவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: