திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுனை சேர்ந்தவர் ஷேக் இம்ரான்(20). திருவள்ளூர் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் விக்ரம்(20). மணவாளநகர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்(20). இவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் புல்லரம்பாக்கம், காந்திநகர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சேக் இம்ரானும், பிரவீன்குமாரும் தண்ணீரில் மூழ்கினர். இதில் பிரவீன்குமார் மட்டும் செடிகளை பிடித்துக் கொண்டு தப்பி மேலே வந்து விட்டார்.