சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர் ஜெயா. இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த ஒரு பிரச்னையில் தம்பதி என்னை தாக்கியது தொடர்பாக அஞ்சுகிராம காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில், அந்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் எஸ்ஐ அனிதா, குற்றம்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஆதரவாக செயல்பட்டு, எனது கணவரை காவல் நிலையம் அழைத்து சென்று தாக்கினார். சிறப்பு எஸ்ஐக்கள் கென்னடி, டேவிட் ஜெயசேகரன் ஆகியோர் எங்களிடம் இருந்த பணம், வங்கி கணக்கு புத்தகம், பைக் சாவி ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.