ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகி்றது. அதுபோல்,கதுவா, பூஞ்ச் மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவும் அது தாக்குதல் நடத்தியது. கதுவா மாவட்ட எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலில் மன்யாரி, சந்த்வா மற்றும் லோன்தி கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்தன. அங்கிருந்த சிவன் கோயிலும் சேதமடைந்தது. நேற்று காலை வரை தொடர்ந்த இந்த தாக்குதலில், சிறிய ரக குண்டுகள், ராக்கெட்டுகள் போன்றவற்றை பாகிஸ் தான் ராணுவம் பயன்படு த்தியது.இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.