இஸ்மிர்: துருக்கி பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியின் 3வது பெரிய நகரமான இஸ்மிரில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாகின. இஸ்மிரில் இடிந்த கட்டிடங்களில் இன்னும் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அங்கு நேற்றும் 3வது நாளாக மீட்புப்பணிகள் நடந்தது. இரவு பகலாக இடைவிடாமல் இப்பணி நடக்கிறது. இதில், தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு வரையில் 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 20 சடலங்கள் மீட்கப்பட்டன. இதன் மூலம், பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. 900 பேருக்கும் மேல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.