வைகோ சூளுரை பாஜ அரசின் சதித்திட்டங்களை வேரோடு சாய்க்க உறுதி ஏற்போம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

நவம்பர் 1ம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்’. 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்எஸ்எஸ் தலைவர் குருஜி கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பாஜ அரசின் சதியை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம். தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.

Related Stories: