113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தேவர் சிலைக்கு கட்சி தலைவர்கள் மரியாதை

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நேற்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், சேவூர் ராமச்சந்திரன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, மாவட்ட நிர்வாகிகள் குணசேகரன், விஸ்வநாதன், பொன்வேல், வாசுகி பாண்டியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம்,  அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவ.ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். பாஜ சார்பில் மூத்த தலைவர் இல.கணேசன் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். இதில் பொது செயலாளர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் டால்பின்  தர், மாவட்ட தலைவர் சைதை சந்துரு, மாவட்ட துணை தலைவர் கருப்ைபயா  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மதிமுக சார்பில் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழகக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமாகா சார்பில் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  இதேபோல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: