கோவையில் பூட்டிய வீட்டில் 7.36 லட்சம் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

கோவை: புதுக்கோட்டை திருமயம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சமீபத்தில் மாயமானார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை கடத்தியதாக சிவகாசியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பவரை போலீசார் தேடி  வந்தனர். ரஞ்சித்குமார், பீளமேடு சேரன் மாநகர் அருகே குமரன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. தகவல் கிடைத்த நிலையில் பீளமேடு போலீசார் அங்கே சென்றனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. போலீசார்  சந்தேகத்தின் பேரில் பூட்டை உடைத்து  சோதனை நடத்தினர். வீட்டிற்குள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் 368 கைப்பற்றப்பட்டன. அவை 7.36 லட்சம் ஜெராக்ஸ் போலி ரூபாய் நோட்டுக்கள் ஆகும். இரவு நேரத்தில் இந்த ரூபாய் நோட்டுக்களை  பல்வேறு வணிக நிறுவனங்களில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என தெரிகிறது.

Related Stories: