சென்னை: சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் முதல்வர் எடப்பாடியும், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை புறப்பட்டு சென்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் இன்று நடக்கும் தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் நேற்று மாலை 5.15 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் மதுரை புறப்பட்டு சென்றனர்.இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் புறப்பாடு பகுதிக்கு வந்து, கேட் எண் 1 வழியாக உள்ளே சென்றார்.