கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தீர்மானம் கொண்டு வர திமுகவை சேர்ந்த கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகர் பேசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் இந்திரா திருமலை, ஜோதி, சிவா உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரவிக்குமார் கூட்டத்தில் பேசினர்.ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற இயலாது என கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உறுதியாக கூறிய நிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 14 கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்து வெளியேறி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.