வாக்குப்பதிவு இயந்திரங்களை கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில், கலெக்டர்  பொன்னையா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர்  - மாவட்ட கலெக்டரால் மாதாந்திர தணிக்கை செய்யப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காஞ்சிபுரம்  ராஜாஜி மார்க்கெட் அருகில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு  அறையை, கலெக்டர் பொன்னையா, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள உள் அமைப்பு  குறித்த ஆய்வு பணி மேற்கொண்டார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) அமிதுல்லா, திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர்  வக்கீல் மதியழகன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: