பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் கட்டமாக 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 1,066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று 6 மாவட்டங்களில் உள்ள 71 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த மொத்தம் 1066 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 952 பேர் ஆண் வேட்பாளர்கள், 114 பெண் வேட்பாளர்கள். ஆளும் ஐக்கிய ஜனதா தளம் 35 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாஜ 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.