தேனி: தேனி மாவட்ட விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் அமைப்பதில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டம் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த பகுதியாகும். இந்தாண்டு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே பெய்தது. வடகிழக்கு பருவமழையும் குறித்த நேரத்தில் துவங்கவில்லை. நேற்று இரவு மட்டும் மாவட்டத்தின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. தற்போது வரை மாவட்டத்தில் எந்த அணைகளும், கண்மாய்களும் முழுமையாக நிரம்பும் அளவிற்கு மழை பெய்யவில்லை. மேலும் மாவட்டத்தில் சின்னமனுார், ஆண்டிபட்டி, போடி ஒன்றியங்களில் பெரும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து கருமை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.