சென்னை: கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு அமைத்து தமிழக அரசு அணைபிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெற்று தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம ஊராட்சியும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலைக் குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.