சென்னை: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் பின்வருமாறு: கொரோனா உயிரிழப்பு, நோய்ப் பரவல், சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை, புதிய தொற்று ஆகியவற்றை துல்லியமாகத் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்துமே குறைந்து வந்தால் மட்டும் தொற்று குறைந்து வருவதாக கருத முடியும். பரிசோதனைகளையும், காய்ச்சல் முகாம்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.