சென்னை: தியேட்டர்கள் திறக்கப்படும்போது தியேட்டருக்கு மக்கள் வருவதற்கு தயக்கம் காட்டலாம். அதனை போக்குவதற்கு நடிகர், நடிகைகள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: தியேட்டர்கள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. மாநில முதல்வரிடம் விரைவில் தியேட்டரை திறக்க கோரிக்கை வைத்திருக்கிறோம். வருகிற 28ந் தேதி மருத்துவ குழுவுடன் கலந்து ஆலோசித்து சொல்வதாக முதல்வர் கூறியிருக்கிறார். நல்ல முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். மத்திய, மாநில அரசின் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்போம். ரசிகர்களால் நாங்கள் வாழ்கிறோம். எனவே அவர்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.