புதுச்சேரி வில்லியனூர் அருகே ஆடு திருடி பைக்கில் தப்பி செல்லும் இளைஞர்கள்: வைரலாக பரவும் சிசிடிவி வீடியோ

வில்லியனூர்: புதுச்சேரி தருமாபுரி பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன். பெரம்பை பங்களாமேடு பகுதியில் வசித்து வரும் இவர், இந்திராநகர் தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். மேலும், புறா, கோழி, ஆடு போன்றவற்ைற வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரின் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை 2 மர்ம நபர்கள் திருடிக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றனர். இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்துவிட்டு பின்னாடியே விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் தப்பித்து விட்டனர்.

இதன் வீடியோ காட்சி அவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் 2 பேர் மாஸ்க் அணிந்து கொண்டு பைக்கில் வந்து நோட்டமிடுகின்றனர். பிறகு அதில் ஒருவர் மட்டும் சென்று கட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டை அவிழ்க்கிறார். பிறகு அவிழ்க்க முடியாததால் திரும்பி சென்று விடுகின்றனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து கயிற்றை அறுத்து ஆட்டை தூக்கிக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது. இது சம்பந்தமாக கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆடு திருடும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: