சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06866) வரும் 26ம் தேதி முதல் தினமும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.30 மணிக்கு எழும்பூர் ரயில்நிலையம் வந்தடையும். மறுமார்க்கமாக எழும்பூர்- தஞ்சாவூர் இடையே சிறப்பு ரயில் (06865) வரும் 27ம் தேதி முதல் தினமும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு சென்றடையும்.
எழும்பூர்-கொல்லம் இடையே சிறப்பு ரயில் (06101) வரும் 25ம் தேதி முதல் தினமும் மாலை 5 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லத்திற்கு காலை 8.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக கொல்லம்- எழும்பூர் இடையே சிறப்பு ரயில் (06102) வரும் 26ம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திற்கு மறுநாள் காலை 3.05 மணிக்கு வந்தடையும்.