மதுராந்தகம்: மாமண்டூர் ஊராட்சியில் பாஞ்சாயத்து அலுவலகம் இல்லாமல் உள்ளது. இதனால், இங்கு உடனடியாக காட்டுவதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் மாமண்டூர் ஊராட்சியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சி அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், இங்கு பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் இல்லை. பல ஆண்டுகளாக செயல்பாட்டு வந்த பஞ்சாயத்து அலுவலகம், தற்போது இடிந்து விழும் நிலையிலும் பயனின்றி கிடக்கிறது. இதனால், ஊராட்சி செயலர் பணிபுரியும் பஞ்சாயத்து அலுவலகம், கடந்த சில ஆண்டுகளாகவே இயங்கவில்லை.