காஞ்சிபுரம்: இளைஞர்கள், சமுதாய பொறுப்புகளை உணர்ந்து, தங்களது பகுதியில் நடக்கும் குற்றச் சம்பவங்களை தடுத்தல், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் நோக்கோடு காவல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிராம சுற்றுக் காவல் குழுவை, எஸ்பி சண்முகப்பிரியா, நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது. மாவட்டத்தில் அதிக குற்ற சம்பவங்கள் நடப்பதாக 107 தாய் கிராமங்கள், 17 குக்கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு 4 இளைஞர்களை தேர்வு செய்து, 5 கிராமங்களை உள்ளடக்கி ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.