சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு வெட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று மாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 1வது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்றபோது, பழுதாகி நகர முடியாமல் நின்றது. என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால், சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியிலிருந்து எஞ்சின் கழற்றப்பட்டு பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.