சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் வெளியிட்டுள்ள தகவலில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை உடனடியாக அமலாகிறது. ஒருமுறை ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால், அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.