கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது. இதனால் திரையுலகம் முடங்கி உள்ளது. 100 பேருடன் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ள போதும் தியேட்டர்களை திறக்க அனுமதிக்கவில்லை. தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் தமிழக அரசும் அனுமதி தர வேண்டும் என திரையுலகினர் கோரி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், பொருளாளர் இளங்கோவன், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் தலைமையில் தியேட்டர் அதிபர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேசினார்கள்.