3 மாத பரோல் கேட்டு உள்துறை செயலருக்கு நளினி மனு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நளினி 3 மாத பரோல் கேட்டு, உள்துறை செயலாளருக்கு மனு எழுதி சிறைத்துறையினரிடம் அளித்தார். அந்த மனுவை உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகேழந்தி கூறுகையில், ‘நளினி கண்புரை, பல் வலி, ரத்தசோகை மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவர் சிகிச்சை பெறுவதற்கு 3 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார். சிறைத்துறையினருக்கு 3 மாத பரோல் வழங்க அனுமதி கிடையாது என்பதால், உள்துறை செயலாளருக்கு மனு எழுதி உள்ளார்’ என்றார்.

Related Stories: