800 திரைப்படம் குறித்து கேள்விக்கு “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம்: நடிகர் விஜய்சேதுபதி பேட்டி

சென்னை: “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம் என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைவையடுத்து, நடிகர் விஜய்சேதுபதி நேரில் ஆறுதல் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12-ம் தேதி காலமானார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலுவம்பாளையத்தில் தனது தாயாரின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார். தொடர்ந்து காரிய நிகழ்வுகளிலும் பங்கேற்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதனை முடித்துக்கொண்டு, நேற்று மாலை 6.05 மணிக்கு சிலுவம்பாளையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். இரவு 9.20 மணிக்கு அவர் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார். முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார். தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்திற்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: