காரைக்குடி: காரைக்குடியில் 10 பைசாவுக்கு முடி வெட்டிக் கொள்ளலாம் என சலூன் கடையில் நூதன அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் குவிந்தனர். தமிழகத்தில் வாடிக்கையாளர்களை கவர 5 பைசா, 10 பைசாவிற்கு ஓட்டல்களில் பிரியாணி விற்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்த சலூன் கடை ஒன்றும் இணைந்துள்ளது. கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு நேற்று ஒருநாள் மட்டும் 10 பைசாவுக்கு முடி வெட்டிக்கொள்ளலாம் என நூதன அறிவிப்பை வெளியிட்டது. இதனால் ஆச்சர்யமடைந்த பொதுமக்கள் நேற்று அதிகளவில் கடை முன்பு குவிந்தனர். 10 பைசாவை கொடுத்து ஆர்வத்துடன் முடி வெட்டிக் கொண்டனர்.