திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதிய செயலியை எஸ்.பி அரவிந்தன் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் அன்னிய நபர்கள் மற்றும் ஏற்கனவே குற்றச்செயல் புரிந்த நபர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் இருக்கும்போது சந்தேகப்படும் படியான நபர்களை படம் பிடித்து அவர்களின் புகைப்படத்தை முகம் அடையாளம் காணும் புதிய செயலியில் ஒப்பிடும்போது ஏற்கனவே குற்றம் புரிந்த நபரின் முக அவயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து குற்றம் புரிந்தவரை அடையாளம் காணப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவி புரியும் வகையில் செயல்படும் புதிய செயலியை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அரவிந்தன் தொடங்கி வைத்தார்.