ஓசூர்: ஓசூர் அருகே குருவி பிடிக்க முயன்ற போது, கிணற்றில் தவறி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யமூர்த்தி(20). தனியார் நிறுவன ஊழியரான இவரது உறவினர் நாகராஜ்(35). கட்டிட மேஸ்திரி. நேற்று இருவரும், அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அந்த பக்கமாக பறந்து வந்த குருவி ஒன்றை பிடிப்பதற்காக சத்யமூர்த்தி முயன்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். உடனே, அவரை காப்பாற்றுவதற்காக நாகராஜ் கிணற்றில் குதித்தார்.