தாம்பரம் நகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குப்பதிவு

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து, திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாம்பரம் நகராட்சியில் நடக்கும் ஒப்பந்த முறைகேடு, லஞ்சம், ஊழல் ஆகியவற்றை கண்டித்தும், முடங்கி போன பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, தாம்பரம் திமுக சார்பில், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் தாம்பரம், சண்முகம் சாலையில் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ, கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுகவை சேர்ந்த ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா, கருணாகரன், வேல்மணி, செல்வகுமார், காமராஜ், ஜோதிகுமார், வா.கா.ரவி, லோகநாதன், தேவராஜ், ஆதிமாறன் மற்றும் பலர் மீது 143, 283, 269 ஆகிய பிரிவுகள் மற்றும் மெட்ராஸ் சிட்டி போலீஸ் ஆக்ட்டின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: