திருநின்றவூர்: ஆவடியை அடுத்த திருநின்றவூர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரவிசங்கர் (57).இவர் சென்னை, அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயா(52). இவர்களுக்கு 2மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ரவிசங்கர் வேலைக்கு செல்லாமல் வீட்டு மாடியில் உள்ள அறையில் ஓய்வு எடுக்க சென்றார். மதியம் மனைவி விஜயா சாப்பிடுவதற்கு அழைக்க சென்றார். அப்போது, ரவிசங்கர மின் விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். அவரை மீட்டு திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரவிசங்கர் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.