முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி சேலத்தில் காலமானார். இதற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களின் தாயார் தவுசாயம்மாள் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தவுசாயம்மாள் உங்களுக்கு உங்களின் குடும்பத்திற்கும் முன்னோடியாக இருந்தார். எளிமை, அன்பு மற்றும் சுயநலமின்மைக்கு உங்களின் தாயார் எடுத்து காட்டாக வாழ்ந்தார். உங்களது தாயார் தற்போது இல்லை என்றாலும் அவர் விட்டு சென்ற நினைவுகளுடன் தொடர்ந்து உங்களுடன் வாழ்ந்து கொண்டே தான் இருப்பார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: