டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

ராமேஸ்வரம்: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வீரராகவராவ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் நினைவிடத்தின் அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்று. கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் யாரும் நினைவிடத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கலாம் நினைவிடம் அருகில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பான பணிகள் தொடங்கும் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Related Stories: